[anbudan] haikuu ,,,,
மக்னே அன்று நீ என் வயிற்றினுள் உதைத்த உதை இன்ப உதை ,
இன்று என் இதயத்தில் உதைத்தவுடன் துன்ப உதை ஆனது ஏன் ?
பக்க வாத்தியங்களுடன் பாட்டு இசைக்கிறாய்
என் இதய வீணை வாசிப்பது கேட்கவில்லையா?
ஏ கொசுவே வந்து இரத்ததை உறிஞ்சினாய் .
ஆனால் அடிபடாமல் பறந்து விட்டாயே ,
அப்பா எப்போதும் நீ அப்பாவாகவே இருக்கிறாயே
என்று நீ என் நண்பனாவாய்?
நிலைக்கண்ணாடியில் நீ உன் அழகை ரசிக்கிறாய் ,
என் மனக் கண்ணாடியில் ஏன் பார்ப்பதில்லை ?
கிளியாகக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி நீ பறந்து விட்டாய்
என்னைக் கூண்டில் அடைத்து விட்டு ,,,,,
அன்புடன் விசாலம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
-~----------~----~----~----~------~----~------~--~---
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home